Home » » பகிரங்க மன்னிப்பு கோரினார் வோர்னர்">

பகிரங்க மன்னிப்பு கோரினார் வோர்னர்">


கிரிக்கெட் விளையாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பந்தை சேதமாக்குவதற்கான முயற்சிகளின் முக்கிய சூத்திரதாரி டேவிட்வோர்னரே என்பதை உறுதிசெய்து அவரிற்கு 12 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் ஏற்படுத்திய வேதனைக்கு நான் மன்னிப்பு கோருகின்றேன் என வோர்னர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக கிரிக்கெட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வோர்னர் இதில் எனது பங்கிற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன் எனது தவறை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை நான் உணர்ந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அனைவரும நேசிக்கும் நான் சிறிய வயதிலிருந்து நேசிக்கும் கிரிக்கெட்டிற்கு இதன் காரணமாக களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |