Home » » ஓய்வு பெறுகின்றார் மோர்னே மோர்கல்

ஓய்வு பெறுகின்றார் மோர்னே மோர்கல்

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்
ஒய்வு பெறுவது என்ற முடிவு கடினமானது என்றாலும் புதிய வாழ்க்கையை தொடங்க இதுவே சரியான தருணம் என நான் கருதுகின்றேன் எனக்கு இளமையான குடும்பமும் வெளிநாட்டு மனைவியும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் அட்டவணை எங்களிற்கு பெரும் சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் குடும்பத்தின் நலனே முக்கியம் அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்காக விளையாடுவது மிகச்சிறப்பான விடயம் ஆனால் குடும்பமே முக்கியமானது என தோன்றுகின்றது நான் கடந்த பத்து வாரங்களாக எனது குடும்பத்தை பிரிந்திருக்கின்றேன் இது மிகவும் கஸ்டமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் கலந்துபேசினே; அவர்களுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பது என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் சிறப்பான நிலையில் உள்ளேன் நான் உலகநாடுகளில் இடம்பெறும் லீக்போட்டிகளில் கலந்துகொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |