மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதியில் உள்ளுர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு – ஆயித்தமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட அம்பிளாந்துறை – மாவடி முன்மாரி பிரதேசப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!
மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: