Home » » மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி! - வாகனம் தீக்கிரை

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி! - வாகனம் தீக்கிரை

மட்டக்களப்பில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கந்தளாய் ஊடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வீதியால் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
கதிரவெளியைச் சேர்ந்த கு.சிங்காரவேல் வயது (70) எனும் ஓய்வு பெற்ற கிராம சேவகரே இந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த கனரக வாகனத்தினை தீயிட்டு எரித்தனர். சாரதி வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையினை பொலிஸார் கட்டுப்பாட்டிகுள் கொண்டுவந்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |