இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 9000 பேர் வேலூர் மற்றும் அப்துல்புரம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் கிராமங்களை சூழவுள்ள நெல் மற்றும் கரும்பு பயிர்ச்செய்கை நிலங்கள் நேற்று இரவு முதல் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளதாக கிராமங்களை அண்டி வாழும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அகதிகள், இந்திய பிராந்திய நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)
0 Comments