நாட்டில் கால நிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம் எனவும் இதன்போது அனர்த்த நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வேளையிலும் அனர்த்த முகாமைத்துவத்தின் எச்சரிக்கைகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் இது குறித்து கரையோர மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் மலையகத்தில் பெய்யும் மழையுடன கூடிய காலநிலையால் மண்சரிவு அபாயங்கள் காணப்படுவதாகவும் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments