|
கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.
|
Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கலைச்செல்வி உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]() ![]() |


.jpg)
.jpg)
0 Comments