Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் தொடரும் மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்தில் கன மழை பெய்து வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 05 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதுவரை 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமான மழை வீழ்ச்சி தீவகப்பகுதி பதிவாகியுள்ளது. அங்குள்ள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இதுவரையும் ஏற்படவில்லை. இரண்டாம் இடைநிலைப் பருவப்பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. மழைவீழ்ச்சி தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments