Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கேப்பாபுலவில் 11 ஏக்கர் காணிகள் இந்த ஆண்டுக்குள் விடுவிப்பு!

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் இரா­ணு­வத்­தி­ட­முள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­திற்கு வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்­துள்ள நிலையில் எதிர்­வரும் டிசம்பர் மாதத்­திற்குள் அக்­கா­ணிகள் பொது­மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­படும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.
'நீண்­ட­கால கோரிக்­கை­யான கேப்­பா­பு­லவு காணி விடு­விப்பு எமது முயற்­சி­யினால் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. முதல் கட்­ட­மாக 243 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­ட­துடன் எமது அமைச்சின் 5 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டின் மூலம் 189 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக் காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாது­காப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். இதன்படி 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இத்தொகை வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments