Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வீடு சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கம்! - ஈபிஆர்எல்எவ் மறுப்பு

எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் நடக்க இருக்­கும் உள்­ளூராட்சித் தேர்­த­லில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தின் கீழ் போட்­டி­யிட மூன்று பங்காளிக் கட்சிகள் முடிவு செய்­துள்­ளன. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தல் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள், யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்­றுக் கூடி ஆராய்ந்­தன. சுமார் இரண்­டரை மணி­நே­ரம் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன், கட்­சி­யின் செய­லர் சதா­னந்­தம், கட்­சி­யின் மையக் குழு உறுப்­பி­ன­ரும் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிறீ­காந்தா, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம் ஆகி­யோர் கலந்­து­ கொண்­ட­னர்.
வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளி­லும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­கான குழு ஒன்றை நிய­மிப்­பது என்­றும், அந்­தக் குழு­வில் ஒவ்­வொரு கட்­சி­யை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இரு­வரை நிய­மிப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.
ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லும் கூட்­ட­மைப்­பி­லுள்ள எல்­லாக் கட்­சி­க­ளி­ன­தும் உறுப்­பி­னர்­கள் போட்­டி­யி­டக்­கூ­டி­ய­தாக வேட்­பா­ளர் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது பற்­றி­யும் கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.
ஒவ்­வொரு கட்­சிக்­கும் ஆகக் குறைந்­தது ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றத்­தி­னது தவி­சா­ளர் பத­வி­யா­வது வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்­ளூ­ராட்சி தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ள­மை­யி­னால் அந்­தக் கட்­சி­யின் நிலைப்­பாட்டை, மாவை.சோ.சேனா­தி­ராசா கேட்டு அறிந்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
‘‘இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு நேற்­றைய சந்­திப்­பில் கலந்­து­கொண்ட கட்­சி­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன’’ என்று தெரி­வித்­தார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.
‘‘நேற்­றைய கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்ட விட­யங்­களை எதிர்­வ­ரும் 12ஆம் திகதி நடை­பெ­றும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டத்­தில் முன்­வைத்து அதன் பின்­னரே ஏனைய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும்’’ என்று அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் அறி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து எதிர்­வ­ரும் உள்­ளு­ராட்­சித் தேர்­தலை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மூன்று கட்­சி­க­ளா­கச் சேர்ந்து எதிர்­கொள்­ளும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments