உயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்திருந்த, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.
இதனால், உயர்நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


0 Comments