Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மோதிக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் - ஒருவர் பலி!

அராலி கிழக்கு கிராம அலு­வ­லர் அலு­வ­ல­கம் முன்­பாக நேற்று மாலை இரண்டு மோட்­டார் சைக்­கிள்­கள் மோதி­ய­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.நேற்று மாலை 3.45 மணி­ய­ள­வில் நடை­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் சுழி­பு­ரத்­தைச் சேர்ந்த சிவ­ராசா ஆனந்­த­கு­மார் (வயது-35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
சுழி­பு­ரத்­தில் வசிக்­கும் ஆனந்­த­கு­மார், வீட்­டில் இருந்து சற்­றுத் தொலை­வில் உள்ள இடத்­திற்கு குடி­தண்­ணீர் எடுத்­து ­வ­ரச் சென்­றுள்­ளார்.அவர் குறுக்கு வீதி­யில் பய­ணித்­துள்­ளார். வீதித் திருப்­பத்­தில் எதிரே வந்த மோட்­டார் சைக்­கி­ளும் அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளும் மோதிக்­கொண்­டன. படு­கா­ய­ம­டைந்த ஆனந்­தக்­கு­மார் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­து­ விட்­டார். மற்­றைய மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு இளை­ஞர்­க­ளும் இந்த விபத்­தில் காய­ம­டைந்­த­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

Post a Comment

0 Comments