Home » » குளிர்பானத்தில் சீனியின் அளவு அதிகரித்தால் வரி

குளிர்பானத்தில் சீனியின் அளவு அதிகரித்தால் வரி

இனிப்பு பானங்களில் காணப்படும் சீனியின் அளவுக்கு ஏற்றால் போன்று குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு அமைவாக 6 கிராமுக்கும் அதிகமான அளவு சீனியை கொண்டுள்ள குளிர்பான வகைகளுக்கு மேலதிகமாக காணப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபா என்ற ரீதியில் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 70 வீதமான உயிரிழப்புகள் தொற்றா நோயினாலேயே ஏற்படுகின்றன. இதில் நீரிழிவு நோய் பிரதானமானது இதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |