2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
27 கற்கை நெறிகளுக்காக இம்முறை 4745 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
0 Comments