Home » » ஆப்கான் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

ஆப்கான் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.சம்பவத்தை நேரில் பார்த்த ரொய்ட்டர் செய்திச்சேவையின் செய்தியாளரும் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர்
காபுலின் வாசிர் அக்பர் கான் பகுதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ள எட்டுபேரின் உடல்களை பார்க்கமுடிந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பலர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தற்கொலை குண்டு தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |