Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வரலாற்றில் முதல் முறையாக தமிழ்க் கட்சிகள் ஒற்றையாட்சிக்கு இணக்கம்! - ரணில்

வர­லாற்­றில் முதற்­த­ட­வை­யாக தமிழ்க் கட்­சி­கள் ஒரே தேசத்தை உரு­வாக்­கு­வ­தற்­கும் பௌத்த மதத்­திற்கு முத­லி­டம் வழங்­கு­வ­தற்­கும் உடன்­பட்­டி­ருப்­ப­தாக பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். காலி­யில் பொலிஸ் வீட்­டுத் தொகு­தியைத் திறந்து வைக்­கும் நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ரணில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
தமிழ்க் கட்­சி­கள் முதன் முறை­யாகத் தமது பாரம்­ப­ரிய நிலைப்­பாட்டை தளர்த்­தி­யுள்­ளன. வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யின் மூலம் நாட்­டின் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைத் தேடிக்­கொள்ள முடிந்­துள்­ளது. அர­சி­யல் பிரச்­சி­னை­யின் கார­ண­மா­கவே வடக்­கில் போர் மூண்­டது. போருக்­குப் பின்­பும் கூட அதைத் தீர்த்­துக்­கொள்ள எமக்­குச் சந்­தர்ப்­பம் காணப்­ப­ட­வில்லை. அன்று தெற்­கின் கட்­சி­க­ளும், சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளும் இலங்கை ஒரு தேச­மாக இருக்க வேண்­டும் என்று பேசி­வந்­தார்­கள். இந்த நாட்­டிற்கு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கூட்­டாட்சி முறை­யொன்று தேவை­யெனத் தமிழ்க் கட்­சி­கள் தெரி­வித்­தன. போருக்­குப் பின்­பும் இந்­தக் கருத்து நிலை காணப்­பட்­டது. தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே நாம் செயற்­பட்­டோம். தற்­பொ­ழுது எமக்கு அதற்­கான தீர்­வும் கிடைத்­துள்­ளது.
அர­ச­மைப்­புச் சபை வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் அந்­தத் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது. பிர­தான கட்­சி­கள் இரண்­டும் இடைக்­கால அறிக்­கை­யின் முதல் பந்­தி­யில் உள்ள பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய உய­ரிய அதி­கா­ரப் பகிர்­வுக்கு நாடா­ளு­மன்­றத்­திற்கு மேல­தி­க­மாகச் செனட் சபை­யொன்றை உரு­வாக்­கு­தல், சுயா­ தீ­ன­மான நீதித்­து­றையை உரு­வாக்­கு­தல், ஒரு தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­தல் மற்­றும் பௌத்த சம­யத்­திற்கு முன்­னு­ரி­மை­ய­ளித்­தல் போன்ற விட­யங்­களைக் கருத்­திற் கொள்­ளத் தயார் என்று தமிழ்க் கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன.
இதற்கு முன்­னர் எப்­போ­துமே இவ்­வா­றா­ன­தொரு கருத்தை இந்­தக் கட்­சி­கள் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. இதற்கு முன்­னர் சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இழு­பறி நிலை­யில் இருக்­கும் போது தமிழ் கட்­சி­க­ளும் ஒரு பக்­கத்­தில் நின்­றி­ ருந்­தன. தற்­பொ­ழுது நாமும் உங்­க­ளு­டன் வரத் தயார் என்று அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். 2015ஆம் ஆண்டு பொது வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பா­லவை வெற்­றி­பெ­றச் செய்ய அவர்­கள் ஒத்­து­ழைத்­தார்­கள்- – என்­றார்.

Post a Comment

0 Comments