Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிலமையை மோசமாக்கிவிட வேண்டாம்

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில் வடகொரியா விடயத்தில் நிலமையை மோசாக்கி விட வேண்டாமென சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் தெரிவித்துள்ளார்.
வட கெரியாவும் அமெரிக்காவும் நாளுக்கு நாள் கடும் வார்த்தை பிரயோகங்களை வெளியிட்டு வரும் தருணத்தில் அண்மையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிலுள்ள குவாம் நகரை தாக்க ஏவுகணையை தயாரித்துள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வட கொரியா தனது வழியை மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதாகவும் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சீன அதிபர் ட்ரம்புடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.இதேவேளை அமைதியை ஏற்படுத்த சீனா துணை நிற்குமெனவும் இரு நாட்டு அதிபர்களும் சிறந்த உறவை பேணி வருவதாகவும் வெள்ளை மாளிகை விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments