ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும் என நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை வழங்கினார்.
எங்களுடைய அரசியல் அதிகாரம் என்பது கடந்த கால ஆட்சிகளிலே பெரும் போடுகாய்களாக தமது கட்சியை காப்பாற்றுவதற்காக சரணாகதி அரசியல் செய்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட காலங்களில் வருகின்ற போது கட்சி போராளிகள் தைரியமாக இருக்கின்றார்கள் என்றே எண்ணியதாக குறிப்பிட்டார்.
கல்குடா காத்தான்குடியில் தாங்கள் அபிவிருத்தி செய்தோம் என கூறும் அமைச்சர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை காட்டிக் கொடுத்து தான் அரசியல் செய்தார்கள்.
எனவே அதில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பங்கு உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments