மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். “மன்னார் கடல் படுக்கையில் உள்ள 13 துண்டங்களில், 8 துண்டங்களில் அகழ்வை மேற்கொள்வதற்கு, 8 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.இந்த விடயம் வெற்றியளித்தால் இலங்கைக்கு நன்மையாக அமையும்” எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments