Home » » மாலிங்கவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது

மாலிங்கவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு அமைச்சரை தவறான வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் முடிவு நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கால இடைக்காலத் தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்து அவர் விளையாடும் ஒருநாள் போட்டியில் பெறும் வேதனத்தின் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் அவர் ஒப்பந்தத்தை மீறி செயற்படும் பட்சத்தில், ஒருவருட காலத்துக்கு கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்படும்.
மேலும் நேற்று ஒன்று கூடிய சிறிலங்கா கிரிக்கட்டின் மத்திய செயற்குழுவின் முன்னால் அவர் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |