Home » » 27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு

27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு

மயி­லிட்­டித் துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு என்­பன எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி மக்­க­ளி­டம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது.
27 வருட இடப்­பெ­யர்வு வாழ்­வின் பின்­னர் மயி­லிட்டி மக்­கள் தமது சொந்த மண்ணை மிதிக்­க­வுள்­ள­னர்.
மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டு­கின்ற தக­வல், யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தள­ப­தி­யால், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நேற்று மாலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மயி­லிட்டி மக்­கள் போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­னர். தமது துறை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களை விடு­விக்­கு­மாறு கோரி பல்­வேறு போராட்­டங்­க­ளை­யும் நடத்­தி­யி­ருந்­த­னர்.
ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர், உயர் பாது­காப்பு வல­யக் காணி­கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வந்­தன. மயி­லிட்­டிப் பிர­தே­சத்­தில் ஆயு­தக் கிடங்கு இருப்­ப­தன் கார­ண­மாவே அந்­தப் பகு­தியை விடு­விப்­ப­தில் படைத் தரப்­பி­னர் தாம­தம் காட்டி வரு­வ­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
விரை­வில் மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டும் என்று தமக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தாக, யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தி­ருந்­தார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், மயி­லிட்­டித் துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் நிலப் பரப்பை விடு­விக்க பாது­காப்­புத் தரப்­பி­னர் இணங்­கி­யுள்­ள­னர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |