Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மண்ணில் மூழ்கிப் போன ஒரே குடும்ப உறுப்பினர்கள் - இறுதிசடங்கு செய்ய யாருமில்லா பரிதாபம்

இலங்கையின் தென் மாகாணத்தை உலுக்கிய இயற்கையின் சீற்றம் காரணமாக, பல்வேறு குடும்பங்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
பேரனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இன்னும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்ததுடன், அவர்களுக்கான இறுதி சடங்கை ஒழுங்காக நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இரத்தினபுரி அயகம, கொலபேவ கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த 7 பேரின் சடலங்களை புதைப்பதற்கு சவப்பெட்டிகள் இன்றி பொலித்தீன் பைகளில் சுற்றி புதைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மற்றொரு நபரின் இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஊடக நண்பர்களே சமய சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எம்.எச்.குணவதி, ஆர்.ஏ.ருவன் நிஷாந்த, தருணி தத்சரிணி, ஆர்.ஏ.கயான் ஹிமிருவன், ஆர்.ஏ.பசிந்து தில்ஷான், சஜித் பிரியங்கர, பிரசங்கிஸா சமன் குமாரி மற்றும் அஜித் குமார மாலகே ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்காக அந்த பகுதி விகாரையில் விசேட மத வழிப்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments