மட்/சிவானந்தா வித்தியாலய க.பொ.உயர்தர (கணிதபிரிவு)வகுப்பு
மாணவன் கருணாகரன் பவனுஜன் (வயது17)
கல்லடிப்பாலத்தில் நேற்று 07/06/2017 புதன்கிழமை காலை
தற்கொலை செய்து கொண்டார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 08/06/2017 வியாழக்கிழமை காலை கல்லடிவாவியில் கண்டெடுக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் அதற்கான விசாரணைகள் இடம் பெறுகிறது.
அன்னாரின் இறுதிகிரிஜை அம்பிளாந்துறையில்
இடம்பெறும்.
மேலும்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் காணாமல் போன மாணவன், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கணிதப்பிரிவில் கற்றுவந்த அம்பிளாந்துறையைச் சேர்ந்த கருணாகரன் பவனுசன் என்ற குறித்த மாணவன், நேற்று கல்லடி பாலத்திற்கருகில் காணாமல் போயிருந்தார். அவரது பாடசாலை சீரூடை மற்றும் புத்தகப்பை என்பன கல்லடி பாலத்திற்கருகில் காணப்பட்ட நிலையில், குறித்த மாணவன் பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், குறித்த மாணவனின் சடலம் கல்லடி பாலத்தின்கீழ் கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





0 Comments