வடக்கு மாகாணசபை விடயத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு செய்யும் இந்த முரண்பாட்டு நிலையானது மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சினையானது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் வேதனையையும் உண்டுபண்ணிய விட யமாக இருக்கின்றது.
ஊழல் செய்ததாக கூறி வடமாகாண அமைச்சர்கள் இருவரை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இடைநிறுத்தியிருக்கின்றார். இந்த விடயத்தை இவ்வளவு தூரம் பெரிதுபடுத்தியிருக்க வேண்டிய அவசிய மில்லை.
கட்சி மட்டத்தில் கூடி பேசி தீர்த்திருக்க லாம். இன்று இப்பிரச்சினை வடகிழக்கில் பூதாகரமான பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஒரு பிரிவினர் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து கொண்டு ஆளுநரிடம் சென்று முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருக்கின் றார்கள். இன்னொரு பிரிவினர் முதலமைச்சருக்கு சார்பாக இருக்கின்றார்கள்.
நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்பொழுது இன்று ஏற் பட்டிருக்கின்ற இந்தப் பிரச்சினையானது தென்னிலங்கை இனவாதக் கட்சிகளுக்கும் பேரினவாதிகளுக்கும் அல்வா கிடைத்தது போன்றிருக்கின்றது.
இன்று நாங்கள் வடகிழக்கு இணைப் பைப் பற்றியும் தீர்வைப்பற்றியும் பேசிக்கொண் டிருக்கின்றோம்.
இந்த நேரத்தில் ஒரு மாகாண சபைக்குள்ளே இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுக் கொண்டு ஒரு மாகாண சபையை கொண்டு நடத்துவதில் இவ்வளவு பிரச்சினைகள் இரு க்கம் என்றால்,
எப்படி இவர்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேச முடியுமென்று தென்னிலங்கையில் இருந்து எத்தனையோ ஊடகங்களும் இணையத்தளங்களும் கேலித்தன மாக பேசுகின்ற நிலைமைக்கு வடமாகாண சபை நிலைவரம் சென்றிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு எமக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதித்து இந்த விடயத்தில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும்.
ஆகவே முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொண்டு அவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை வழமையான முறையில் செய்யலாம்.
இன்று வடக்கு கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டம ப்பை உடைக்க வேண்டுமென்று நினைக்கின்ற சக்திகள் தேர்தலிற்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகின்றார்கள்.
தேர்தலுக்குப் பின்பும் செயற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வட மாகாண விவகாரம் பெரிய வழியை திறந்து விட்டிருக்கின்றது என்றார் வியாழேந்திரன்.
0 Comments