Advertisement

Responsive Advertisement

வெள்ளத்தால் தொடர்ந்தும் வாகன போக்குவரத்து தடைகள் ஏட்பட்டுள்ள வீதிகள்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மாத்தறை – ஹக்மன, மாத்தறை – அக்குரெஸ்ஸ, அக்குரெஸ்ஸ – கம்புறுபிட்டிய, அக்குரெஸ்ஸ – கெதன்வில, காலி – தெனியாய வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, உடுகம வீதிகளும், பெலவத்த, நெலுவ வீதியும் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு அமைவாக உள்ள பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, அகுருவாதொட்ட, அளுத்கம வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
நாகொட, நேபட, களுவெல்லாவ வீதிகளும் நீரில் மூழ்கியிருக்கின்றன. பாணந்துறை – இரத்தினபுரி வீதியும், இங்கிரிய – ஹல்வத்துர வீதியும் நீரில் மூழ்கியிருக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு – கடுவல, ஹங்வெல்ல வீதியும், களுஅக்கல – லபுகம வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments