Advertisement

Responsive Advertisement

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ அண்மித்தது

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 99 ஆகும். களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
6 லட்சத்து 4 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 376 நலன்புரி நிலையங்களில் 83 ஆயிரத்து 224 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Post a Comment

0 Comments