Home » » அனர்த்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுங்கள் : கண்டு கொள்ளாத பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழப்பு

அனர்த்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுங்கள் : கண்டு கொள்ளாத பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழப்பு

அனர்த்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது மக்கள் அதனை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் இல்லையேல் உயிர் ஆபாத்துகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் கடந்த வெள்ள , மண்சரிவு அனர்த்தங்களின் போதும் முன்னெச்சரிக்கைகளை முறையாக பின்பற்றாமையினாலேயே அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீட்டாரை வெளியேறுமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வீடொன்றில் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 4 பேர் கொண்ட குடும்பம் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும் அதேபோன்று வீட்டில் பொருட்களை எடுக்க வேண்டுமென வீடுகளுக்கு சென்ற 10 பேர் அதேபோன்று உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |