Advertisement

Responsive Advertisement

பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 பேர் பரிதாபமாக மரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆபத்தான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்குமாறு அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நான் பத்தேகம பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பலர் செல்வதனை அவதானித்தேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளை கூட அவ்விடத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கையினை மக்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments