Home » » மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் -முஸ்லிம் பிரதேசங்களில் வழமை நிலை

மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் -முஸ்லிம் பிரதேசங்களில் வழமை நிலை

காணாமல்போனவர்களின் உறவினர்களின் கோரிக்கையினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்களுக்கான நீதி நியாயம்கோரி விடுத்த வேண்டுகோளுக்கு கிணங்கள் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் உத்தியோகத்தர்கள் வரவு குறைவாகவுள்ளமை பொதுமக்கள் செல்லாமை காரணமாக அரச நிர்வாகம் முடக்கப்பட்டது.அதேபோன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மாணவர்களின் வரவின்மை காரணமாக ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைகளில் இருப்பதை காணமுடிகி;ன்றது.
தூர பயணங்களை மேற்கொள்ளும் ஒரு சில தனியார் பஸ் போக்குவரத்துகள் நடைபெறுகின்றபோதிலும் உள்ளூர் போக்குவரத்துகள் முடங்கியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்துச்சேவை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
தனியார் வங்கிகள் இயங்குகின்றபோதிலும் அரச வங்கிகள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் வழமைபோன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வழமையான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.
DSC06558DSC06560DSC06562DSC06568DSC06570DSC06571DSC06574DSC06579DSC06584DSC06586DSC06596DSC06598DSC06602DSC06604
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |