Home » » மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வாவிக்கரை ,மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கிணறில் இருந்தே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சிசுவினை பிரசவித்தவர்கள் குறித்த சிசுவினை சீலையில் சுற்றி கல்லைக்கட்டி குறித்த வீட்டின் கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசவே கிணறினை துப்புரவுசெய்யும்போது குறித்த கிணற்றினுல் சிசுவின் சடலத்தைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த வீட்டில் வேலைசெய்துவந்த பெண்ணின் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
DSC03595
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |