களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிலும் வேக்கரிப் பொருட்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் துறைநீலாவணையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் 1 ஆம்திகதி புதன்கிழமை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வளைவு பிரதானவீதியால் மருதமுனையில் இருந்து வேக்கரி உணவுகளை விற்பனை செய்யவதற்கு வந்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்று படுகாயமடைந்தவரை கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்
துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த கருணாநிதி ரஜீந்தன் 26 வயது என்பவரே மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடிப்பொலிஸார் தெரிவித்தனர் இதுதொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.





0 Comments