இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட T2௦ தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்குபற்ற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜொகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கஅணியுடனான இரண்டாவது T2௦ போட்டியில் காயமுற்ற நிலையில், அணியை வெற்றிப்பாதைக்கு வழி நடாத்தியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், குறித்த போட்டியின் பின்னர்நாடு திரும்பியிருந்தார்.
தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன்அங்கிருந்து இலங்கை அணி நேரடியாக அவுஸ்திரேலியா செல்லும். அதேநேரம், T2௦போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் சில வீரர்கள் பெப்ரவரி 13ஆம் திகதிகான்பெர்ராவில் இலங்கை அணியுடன் இணைந்து கொள்ளும். அதனைத் தொடர்ந்துஇலங்கை அணி, பெப்ரவரி 15ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதமர்பதினொருவர் அணியுடனான பயிற்சி போட்டியில் பங்குபற்றவுள்ளது.
அதனை தொடர்ந்து, பெப்ரவரி 17ஆம், 19ஆம், மற்றும் 22ஆம் திகதி அவுஸ்திரேலியஅணியுடனான மூன்று T2௦ போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. குறித்தபோட்டிகளின் பின்னர் பெப்ரவரி 23ஆம் திகதி இலங்கை அணி நாடு திரும்பும் வகையில்ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்பொழுது கிடைக்கபெற்றுள்ள நம்பகரமான செய்திகளின்படி, தென்னாபிரிக்கமண்ணில் இடம்பெறும் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அணித் தலைவர்தினேஷ் சந்திமல் மற்றும் தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் மற்றும் சுரங்க லக்மால்ஆகியோருக்கு குறித்த அவுஸ்திரேலிய அணியுடனான T2௦ தொடரில்ஓய்வளிக்கப்படலாம்.
அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க முழங்கால் காயத்திலிருந்து முழுமையாகமீண்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான குறித்த தொடரில் அணியில்இணைத்துக்கொள்ளப்பட அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேவேளை,தற்போது ஒருநாள் அணியை வழிநடாத்தும் உபுல் தரங்க அவுஸ்திரேலியாவுடனானதொடரிலும் அணியை வழிநாடாத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறித்த தொடரிற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ குழாம் பெப்ரவரி 7ஆம் திகதிவெளியுடப்படவுள்ளது.
0 Comments