மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் என்.விமல்ராஜ் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை களுதாவளை,சோமசுந்தரம் வீதியில் உள்ள குறித்த பணிப்பாளரின் வீட்டுக்கு வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்கு முன்பாக தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவர் மீது சரமாரியான துப்பாக்கி சூட்டை நடாத்திவிட்டு தப்பிச்சென்றதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கை,கால்,வயிற்றுப்பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருடன் இணைந்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: