Advertisement

Responsive Advertisement

நாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா?

நாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா? நல்லாட்சியின் லட்டசணம் இதுவா? எங்கள் சொந்த நிலத்திலிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் நின்மதியாக வாழவேண்டும். என  முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களை தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றவேண்டும். எனக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதேபோல் புதுக் குடியிருப்பு மக்களும் தொடர்சியான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பூர்வீகமான இடத்தில் உள்ள வருமானத்தை எடுத்து அவர்கள் ஆழ்கிறார்கள். கையளவு தூரத்தில் வருமானம் வரும் வாழ்வாதாரம் கேப்பாபிலவில் உள்ளது.
எங்கள் மண்ணை விடு வியுங்கள். நந்திக்கடலில் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் சுற்றி போகவேண்டியுள்ளது. நந்தி கடலுக்குள் வாழ்வாதாரத்தை முடக்கியிருக்கின்றார்கள்.
எங்களது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை விமான்படையினர்  தம்வசம் வைத்துள்ளார்கள். காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். எத்தனை பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம்  அதனை பறித்திருப்பது  எங்களை சாகடிப்பதற்கு சமமானது. எனத்தெரிவித்து முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும்   முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments