நாட்டின் எதிர்காலம் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே தங்கியுள்ளது. எனவே நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இதற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
69ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டின் சகல மக்கள் மத்தியிலும் இந்த ஆண்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இது எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களதும் நன்மைக்கு மிக இன்றியமையாததாகும்.
நாட்டில் வன்முறை முரண்பாடு ஒரு முடிவிற்கு வந்துள்ள போதிலும், அந்த வன்முறைகளுக்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் ஏற்பட வாழ்த்துகிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments