அரச சேவையாளர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊழியர்களின் தொழில் தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இரண்டாயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
மேலதிக நேர வேலை சம்பளம் மற்றும் கடன் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு இந்தாண்டு அரச சேவையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments