Home » » பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும் ?

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும் ?

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உற்பத்திப் n;பாருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பேக்கரி உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாஜரினின் விலை விற்பனை விலையையும் விட உயர்த்தப்பட்டுள்ளது எனவும், பாம் எண்ணெயின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் சில பேக்கரி உரிமையாளர்கள் ஏற்கனவே உற்பத்திகளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதாக என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேக்கரி உற்பத்தி விலைகளை அதிகரிக்க இடமளிக்கப்படாது என அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |