Home » » சட்ட விரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

சட்ட விரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பளை பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி  அரச, காட்டுப்  பகுதிக்குள் சட்ட  விரோதமா  இயங்கிய கசிப்பு  உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு, மூன்று  இலட்சம் மில்லி லீற்றர் கசிப்புக்கோடாவும், இருபத்தி நாலாயிரம், மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தி  உபகரணங்களுடன் சந்தேகத்தின் பேரில் சம்பவ  இடத்தில் வைத்து இரண்டு  பேர் கைது செய்யப்பட்டதுடன்,   கசிப்பு உற்பத்தி நிலையமும்  நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாகவும் பளை பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை  அதிகாலை -2.00, மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத்  தகவலின் அடிப்படையில், பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. எஸ். டபிள்யூ, ரஞ்சன பண்டார தலைமையில்  பொலிஸ் சாஜன் நவரட்னா  (36874), மற்றும் பொலிஸ் கொஸ்தபல்களான,       சுனில் (33 605 ), குணதிலக , (333 25 ), பிரசாந்த், (83 237), ஆகியோராடங்கிய பொலிஸ் அணியினரின் திடீர் முற்றுகையின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பற்றப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப்பொருட்கள்  பளை  பொலிஸ் நிலையத்  வைக்கப்ட்டிருப்பதுடன் கைதானசந்தேக நபர்களிடம் விசாரணைகள் நடைபெற்று முடிந்த  நிலையில் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும்,
எதிர் வரும் , 04/01 /2017, ஆம் திகதி புதன்கிழமை காலை  கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்களுடன் சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில்   முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்   நடைபெற்று வருவதாக பளை பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image-0-02-06-46db387dac7eda75a11c978570a9f604920ada680a632ce318a182be074e007c-V
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |