கொழும்பில் இன்று 31ஆம் திகதி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் விசேட வான வெடி வேடிக்கை நிகழ்வொன்றை நடத்துவதற்கு நிதி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி இரவு 11.50 மணி முதல் நாளை அதிகாலை 12.15 வரை கொழும்பு கங்காராம வீதியில் பேரே வாவியை அண்மித்த பகுதியில் இந்த வான வெடி வேடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஶ்ரீ லங்கா ரெலிக்கொம் நிறுவனம் , மொபிடெல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரனை வழங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments