பம்பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசேதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பம்பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments