Home » » கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை

கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை

ஏறாவூர், புன்னகுடா கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று நீராடச் சென்ற வேளை, அவர்களில் மூவர் கடல் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது அந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காப்பாற்றப்பட்ட மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள மாணவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |