மனிதக் கொலை சட்பவங்கிளல் தேடப்பட்டு வந்த ஒருவர் மீட்டியாகொட, களுபே பிரதேசத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, பத்தேகம, கோனபீனுவல பிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றொரு கொலை சம்பவம் ஆகியன தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
0 Comments