Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தண்டப்பண அதிகரிப்பில் திருத்தம் ?

வீதி போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கான தண்டபணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி செல்லல் , காப்புறுதி இன்றி செல்லல் , மது போதையில் வாகனத்தை செலுத்தல் மற்றும் இடது பக்கமாக முந்திச் செல்லல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் இடது பக்கமாக முந்திச் செல்லல் தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுவதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments