இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை சற்றுமுன் சித்திபெற்றவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இப்பரீட்சை கடந்த 10.07.2016இல் கொழும்பில் நடாத்தப்பட்டது.
விசேட மற்றும் பொது பாடத்துறைகளுக்காக இவ்வாட்சேர்ப்பு இடம்பெறவிருக்கிறது.
சித்திபெற்ற 812பேருக்கும் வாய்மொழிப்பரீட்சை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. அதில் தெரிவாவோர் இ.க.நி.சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்.
சித்திபெற்ற 812பேரின் பெயர் விபரம் சுட்டிலக்கம், அடையாளஅட்டை, இலக்கம் விலாசம் மொழிமூலம் போன்ற பூரண விளக்கத்துடன் பதிவேற்றம் இடம்பெற்றுள்ளது
கல்வியமைச்சின் இணையத்தளத்தின் சிங்களப்பக்கத்தில் மாத்திரம் முதலில் பதிவேற்றம் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப்பக்கத்தில் பார்த்தோர் ஏமாற்றமடைந்தனர்.
காரைதீவில் மூவர் சித்தி!
இன்று வெளியான இவ்வுயர் பரீட்சையில் காரைதீவைச்சேர்ந்த மூவர் சித்தியடைந்துள்ளனர்.
காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியல் கற்பிக்கும் ஆறுமுகம் பார்த்தீபன் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக்கல்லூரியில்கற்பிக்கும் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் திருமதி தேவதர்சிகா அமிர்தானந்தன் ஆகியோரே சித்தியடைந்தவர்களாவர்.
0 Comments