Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கோர விபத்து..! நான்கு பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு, கரடியனாறுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூமாச்சோலைச் சந்தியில் 18.10.2016  இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு -பதுளை வீதியூடாகப் பாலாமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் பாலாமடுவிலிருந்து செங்கலடி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 04 பேரும் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்


Post a Comment

0 Comments