Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட் விளையாட்டின் போது மோதல்; சிறுவன் பலி! 14 வயது மாணவன் கைது!!

களுத்­துறை ‍வெலிப்­பன்ன பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட உதும்­கம பிர­தே­சத்தில் கிரிக்கெட் விளை­யாட்டின் போது ஏற்­பட்ட மோதல் காரண­மாக 15 வய­து­டைய சிறுவன் ஒருவன் விக்­கெட்­டினால் அடித்து கொலை செய்­யப்பட்­டுள்ளார். கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்­டியில் ஈடு­பட்ட குழு­வி­ன­ரி­டையே ஏற்­பட்ட முறுகல் நிலை­யை ­ய­டுத்தே இந்த அசம்­பா­விதம் இடம்­பெற்­றுள்­ளது.
மேலும் கொலை தொடர்பில் 14 வய­தான மற்­றொரு சிறுவன் ஒரு­வனைக் கைது செய்துள்­ள­தா­கவும் சம்­பவம் நேற்று பிற்­பகல் 2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடையில் இடம்­பெற்­ற­தா­கவும் வெலிப்­பன்ன பொலிஸார் தெரி­வித்­தனர்.
நேற்று விடு­முறை தினம் என்­பதால் மாண­வர்கள் சிலர் இணைந்து திறந்த‌ வெளி­யொன்றில் கிரிக்கெட் விளை­யா­டி­யுள்­ளனர். இதன் போது ஒரு கட்­டத்தில், துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்த்த வீரரை (தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி இறந்த மாணவன்) நோக்கி வீசப்­பட்ட பந்து மட்­டையில் படாது விக்கட் காப்­பா­ளரை சென்­ற‌­டைந்­துள்­ளது. இந்த நிலையில் அந்த பந்­தா­னது அகலப் பந்து (வைட் பந்து ) என துடுப்­பாட்ட வீரர் கூறி­யுள்ளார்.
இதன் போது பந்து வீசிக்­கொண்­டி­ருந்த்த வீர­ரான 14 வய­து­டைய மற்­றொரு மாணவன் அதனை நிரா­க­ரித்­துள்ளான்.

Post a Comment

0 Comments