Home » » முத்துக்குமார் பற்றிய கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் சகோதரர் உருக்கமான கடிதம்.

முத்துக்குமார் பற்றிய கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் சகோதரர் உருக்கமான கடிதம்.

மறைந்த திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் குடும் பம் வறுமையில் இருப்ப தாகவும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நா.முத்துக்குமார் தம்பி ரமேஷ்குமார் எழுதி யுள்ள கடிதத்தில் கூறி இருப்ப தாவது:-
அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சி யில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...’’ என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...
அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது.
சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அள விற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பா தித்த எதையும் நாங்கள் பெரி தாகக் கருதவில்லை.எங்களது தந்தை எங்களை பழக்கியது போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப் படுத்தியே வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதி களையும் அண்ணன் செய்து விட்டே இறந்திருக்கிறான். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட் டால் எந்த நிலையிலும் தட் டாமல் உதவி செய்வது என் கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவன் அவன்.
செய்திகளில் வருகிற பல கதை சொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது. அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம்.
தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவ றாக இடம்பெறச் செய்து விடா தீர்கள் என்கிற கோரிக்கைக் காகவுமே இக்கடிதம். இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்க ளும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க் குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது பிரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது.
ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடிய வில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப் பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான். மற்றெல்லோரையும் விட அவன் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.
அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணனாகவே தொடர்கிறார்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கோ, புனைக்கதை களுக்கோ எங்களில் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன்.
அவனது நூற்றுக்கும் மேற் பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின் றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக் கான படமாக ‘தரமணி’யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந் தான்.
இன்னும் பல நூறு விழுது கள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகி றேன். மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்க மேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு பிரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள் ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |