சில தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகரான சாகீப் சுலைமான் என்பவர் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மாவனெல்ல ருக்கலேகம பகுதியில் சடலம் மீட்கப்பட்டதுடன் அது காணாமல்போயிருந்த குறித்த வர்த்தகருடையது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments