Advertisement

Responsive Advertisement

யாழ் பாடசாலைகளுக்கு 31ம் திகதி விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என, வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.
இதற்கமைய 3ம் தவணைக்கான பாடசாலைகள் 1ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments