Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில்சுவாமி தந்திரதேவா மகராஜ் நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது ..
அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்தி எமது பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.DSC_1527DSC_1528DSC_1537

Post a Comment

0 Comments